Tuesday, October 18, 2011

நான் ரசித்த ஜோக்ஸ் 10:

நான் படித்து ரசித்த ஜோக்குகள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. “ டாக்டர், எனக்குப் பிரஷர் அதிகமா இருக்கு “
“ என்ன பிரஷர்? லோ-பிரஷரா? ஹை-பிரஷரா? “
“ அந்தப் பிரஷர் இல்லை. நாலா பக்கமும் கடன்காரங்க
பிரஷர் அதிகமாயிருக்கு. ஆயிரம் ரூபாய் கடன் தாரிங்களா? “

2. கணவன்: வீட்டை நீதான் பெருக்கினியா?
மனைவி: ஆமா! எப்படி கண்டுபிடிச்சீங்க? நீட்டா இருக்கா?
கணவன்: அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. நேத்து
நைட்டு பையிலருந்து சில்லறை கீழெ
விழுந்துடுச்சு. வேலைக்காரின்னா எடுத்து
பத்திரமா வச்சிருப்பா. இப்ப இல்ல. அதான் நீதான்
பெருக்கினியான்னு கேட்டேன்.

3. “ என் மனைவி இறந்துபோய்விட்டால் நான் மறுமணமே
செய்துக்க மாட்டேன்.”
“ அவளைப் போல மனைவி அமைய மாட்டாளேன்னு
அச்சமா?”
“இல்லை. அமைஞ்சுடுவாளோன்னு பயம்தான். “

4. நீதிபதி: உனக்கு என்ன வயசு?
கைதி: ஐம்பதுங்க.
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.

5. நர்ஸ்: தூங்குவதற்கு மாத்திரை போட்டுக்கச் சொன்னேனே. போட்டீங்களா?
நோயாளி: ஸாரி! மறந்து போய்த் தூங்கிட்டேன்.

6. ஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா
பிறக்கணும்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா?

7. “ அம்மா ராப்பிச்சை! சோறு போடுங்க! “
“ ஏம்பா நீ பகல்லகூட வந்தே போலிருக்கே “
“ அது ஓவர் டைமுங்க. “

8. மாமனார்: நான் செஞ்ச ஸ்வீட் எப்படி இருக்கு!
மாப்பிள்ளை: முதல் ஸ்வீட் இப்போது வேண்டாம்.இரண்டாவது ஸ்வீட்
எப்போதும் வேண்டாம்.

9. நீதிபதி: பாலத்துக்கு அடில வெடி வச்சி தகர்க்க திட்டம்
போட்டது நீதானே?
கைதி: பாலத்துக்கு அடில தீபாவளி கொண்டாடினேன். இது
தப்புங்களா?

10. கணவன்: நீ செஞ்ச உப்புமாவுல ஏதோ தப்பு
நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.
மனைவி: ஏன் நல்லா இல்லையா?
கணவன்: இல்ல வழக்கமா வர்ற வயித்துவலி வரலியே.
அதான் கேட்டேன்.


குறிப்பு: அடுத்த சிறந்த ஜோக்ஸ் பத்து மற்றொரு பதிவில்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.