Monday, October 24, 2011

என்னைக் கவர்ந்த பொன்மொழிகள் வரிசை - 2:

1. மனிதனுக்கு ஆசையால் விருப்பமும்,
விருப்பத்தால் கோபமும், கோபத்தால் மயக்கமும், மயக்கத்தால்
புத்திநாசமும், புத்திநாசத்தால் அழிவும் ஏற்படுகிறது.

2. நீண்ட நாள் வாழவேண்டும் என்பது எல்லாருடைய ஆசையும்.
ஆனால் நன்றாக வாழ நினைப்பவர்கள் குறைவு.

3. ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும், மாறக்கூடாது.
ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.

4. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. இதயத்தின் ஈரமும் வேண்டும்.

5. பணமும் மகிழ்ச்சியும் நிரந்தர விரோதிகள். ஒன்று தங்குமிடத்தில்
மற்றொன்று தங்குவதில்லை.

6. முழுக்க முழுக்க எட்டிக் காயாக இருக்காதீர்கள். இந்த உலகம்
உங்களை உமிந்து விடும்.

7. துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.

8. உழைப்பும் நம்பிக்கையும் சேருமிடத்தில் ஏழ்மை இருக்காது.

9. தீய குணங்களை சுலபமாக விடமுடிவதில்லை. ஆனால்
நல்ல குணங்களை சுலபமாக விட்டு விட முடிகிறது.

10. ஒழுக்கம் என்பது மரம். புகழ் என்பது அதன் நிழல்.
நிழலைப் பற்றியே அதிகமாக அதிகமாக நினைக்கிறோம்.
ஏனோ மரத்தை மறந்துவிடுகிறோம்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.