Friday, October 28, 2011

வியப்பூட்டும் உண்மைகள்! - நம்ம ஸ்டைல்...ல.

சில விஷயங்களை அறிந்துகொள்ளும்போது அட அப்படியா? என்று ஓர் ஆச்சர்ய உணர்வு தோன்றும். அப்படிப்பட்ட சில விஷயங்களை துணுக்குகளாக தருகிறேன்.

1. துருக்கியின் தலைநகரான் இஸ்தான்புல் நகரம் இரண்டு கண்டங்களில்
அமைந்துள்ளது. ( நமக்கு தெலுங்கானவையே சமாளிக்க முடியலயே.
எப்படித்தான் எல்லைப் பிரச்சினையை சமாளிக்குறாங்களோ? தெரியல.)

2. 80 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் மீண்டும் திருமணம்
செய்ய நேரிட்டால் தற்போது வாழ்ந்து வரும்
மனைவியையே திருமணம் செய்வதாக
தெரிவித்துள்ளார்கள். (புது பிசாசுக்கு பழைய பேயே
பரவாயில்லை அப்படின்னு நினைச்சாங்களோ
என்னவோ?)

3. கம்போடியா நாட்டில் ஓடும் டொன்லெ சாப் என்கிற
நதியானது வருடத்தில் 6 மாதம் வடக்கு நோக்கியும் மீதி 6 மாதம்
தெற்கு நோக்கியும் ஓடுகிறது.
( நம்ம காவிரிகூட மீதிநாளும் நம்ம பக்கம் திரும்பிட்டா
காவிரி பிரச்சினை வராதுல்ல)

4. சாதாரணமாய் நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை
வைத்து கோடு போட்டால் 35 மைல் நீளத்துக்கு வருமாம்.
(இனிமே தேர்தலுக்கெல்லாம் பென்சிலை
வைத்தே விளம்பரம் பண்ணிரலாம் போலிருக்கே)

6. மனிதன் பிறக்கும்போது 300 எலும்புகளுடன் பிறக்கிறான்.
ஆனால் நன்கு வளர்ந்த பின்பு 206 எலும்புகள் மட்டுமே
உள்ளவனாய் மாறுகிறான். காரணம் பலவீனமான
எலும்புகள் பலமுள்ள எலும்புகளோடு ஒன்றோடு ஒன்று இணைந்து
விடுவதுதான். (இனிமே உன் எலும்பை எண்ணிருவேன்னு யாரயும்
சொல்லாதீங்க. எண்ணிக்கை தப்பாயிடும்)

7. அமெரிக்காவின் நாசா விண்ணில் நிறுவியுள்ள ஹப்பிள் டெலஸ்கோப்பானது
பூமியை ஒருமுறை சுற்றுவதற்கு 97 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது.
இதற்கு அது எடுத்துக்கொள்ளும் சக்தி எவ்வளவு தெரியுமா?
வெறும் 30 பல்புகள் எரியத் தேவையான சக்திதான்.
(நம்ம அரசு அலுவலங்களில் பணிபுரிபவர்களுக்கு
ஹப்பிளை வைத்து டியூசன் எடுக்கலாமோ?)

8. உலகமெங்கும் நடக்கும் திருமண பந்தங்களில் 70
சதவிகித ஆண்களும், 60 சதிவிகித பெண்களும் தங்கள்
வாழ்க்கை துணைக்கு துரோகம் செய்வதாய் ஒரு ஆராய்ச்சி
அறிக்கை தெரிவிக்கிறது.
(அட. சே! என்னப்பா இதெல்லாம் போய் வெளிய சொல்லிக்கிட்டு!)

9. ஒரு ஆண்டில் விமான விபத்துக்களால் நடக்கும் மரணங்களை விட
கழுதைகள் கடித்து ஆண்டுதோறும் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை
அதிகமாம்.(அடேங்கப்பா! கழுதைங்ககிட்டயும் ஜாக்கிரதையாதான்
இருக்கணும் போல)

10. ஏர்க்கண்டிஷன் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அந்த காலத்தில் அறையை
கூலாக வைத்திருக்க வெள்ளைத் திரைகளை மக்கள்
பயன்படுத்தியிருக்கிறார்கள்.
(நம்ம ஊருக்கு இதுல்லாம் சரிப்பட்டு வருமுங்களா?)

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.