Monday, April 2, 2012

அருமையான பழமொழிகளும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும்




நம் முன்னோர்கள் அருமையான பழமொழிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அனுபவம் பிழிந்தெடுத்து வெளிவந்த அருமை மொழிகள் அவை. பல பெரிய தன்னம்பிக்கை புத்தகங்கள் கூட சொல்லிக் கொடுக்க முடியாத உன்னத விஷயங்களை சில பழமொழிகள் சொல்லிக்கொடுத்து விடுகின்றன. நான் படித்து ரசித்த சில அருமையான பழமொழிகளையும் அவற்றிற்கான ஆங்கில மொழியாக்கங்களையும் கீழே கொடுத்துள்ளேன்.

1. ஏழைப் பிள்ளைக்கு தெய்வமே துணை.
(God is the protector of the helpless children).

2. தூங்காதவனே நீங்காதவன்.
(He is who ever active is never moved.)

3. ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
(Even if a man make penance standing on the point of a needle, he will not get more than was destined for him.)

4. தாரமும் குருவும் தலைவிதிப்படி.
(You get your wife and your priest according to destiny)

5. வந்த கூத்துக்கு ஆடித்தானே ஆக வேண்டும்.
(If he begins a dance at all, he must finish it.)

6. சுக துக்கம் சுழல் சக்கரம்.
(Joy and grief are a whirling wheel.)

7. முப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்லை. முப்பது வருஷம் தாழ்ந்தவனுமில்லை.

(There is no one who has prospered for thirty years, and no one who has met with adversity for thirty years.)

8. முத்திலும் சொத்தை உண்டு. பவழத்திலும் பழுது உண்டு.
(There are defects in Pearls and Flaws in coral.)

9. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
(The eye cannot see the defect of the eye-lid)

10. அக்காளைப் பழித்து தங்கை அவசாரியானாள்.
(The Sister who blamed her elder sister became a harlot herself.)
11. முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?
(If your face is ugly, what can the mirror do?)

12. அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேண்டும்.
(One will have to weep endlessly to expiate sin done willfully.)

13. உதைத்த கால் புழுக்கிற போது அல்லவோ புழுக்கும்.
(When the times comes for worms to consume the kicking foot, will they not consume it?)

14. பள்ளத்திலே இருந்தால் பொண்டாட்டி. மேட்டில் இருந்தால் அக்காள்.

(In the valley he treats her as his wife, on the hill he treats her as his elder sister.)

15. உதடு பழஞ் சொறியுமாம். உள்ளே நெஞ்சு எரியுமாம்.

(His lips rains fruit, his heart within is on fire.)

16. அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்றே எண்ணுமாம்.
(The dog seems to think that whatever is taken is intended for it.)

17. போக்கற்ற நாய்க்கு போனதெல்லாம் வழி.
(A dog without an aim, a road that goes in every direction!)

18. இன்றைக்கு இலை அறுக்கிறவன், நாளைக்கு குலை அறுக்க மாட்டானா?
(Will not he who steals leaves today, steal a cluster of fruit tomorrow?.)

19. தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய்.
(If you be humble, you will remain prosperous.)

20. அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் காசு கொடுத்தாலும் கிடைக்குமா?
(Even if you give a thousand gold-pieces, can you regain the chastity lost for half a copper coin?)





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

23 comments:

  1. துரை டேனியல் அருமையான பகிர்வு, பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. தமிழ் பழமொழிகள்.நான் அறிந்திராத பழமொழிகள்கூட இருக்கே.நன்றி டானியல் !

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு, பயனுள்ளதும் கூட.. வேறு ஏதேனும் பழமொழிகள் பிற்காலத்தில் கிடைக்கும் போது நீட்டிக்கவும். யாரேனும் கூகுளில் தேடும் போது உபயோகமாகும்.

    ReplyDelete
  4. வாக்குகளும், வாழ்த்துகளும்..

    ReplyDelete
  5. @ கும்மாச்சி

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ ஹேமா

    - உடன் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  7. @ பாரத்...பாரதி

    - அப்படியா? நிச்சயம் செய்கிறேன் சகோ. மீதமுள்ள பழமொழிகளையும் திரட்டி சில பதிவுகளை இடுகிறேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி. வருகைக்கும் வாக்குக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  8. காவக்காரன்... கோவக்காரன்... வேட்டைக்காரன்... எங்க வூட்டு மாப்பிள்ள ஒரு குடிகாரன்...

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே,
    பழமொழிகளும் அதன் விளக்கமும் அருமை.
    ஆங்கில மொழியாக்கம் மிக நன்று.

    ReplyDelete
  10. நல்ல பழமொழிகள். அருமையான ஆங்கில மொழிபெயர்ப்பு. படித்து ரசிக்க முடிந்தது துரை. நன்று!

    ReplyDelete
  11. பயனுள்ள பழமொழிகள்... மொழிபெயர்ப்பும் அருமை.... ரசித்தேன் நண்பரே....

    ReplyDelete
  12. இதுவரை அறியாத பழமொழிகள்
    முத்துக்களை அருமையாக கோர்த்துத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. நல்லதோர் பதிவு - பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. பல பழமொழிகள் தெரிந்தவையா இருந்தாலும், சில பழமொழிகள் இன்றுதான் கேள்விப்படுகின்றேன். பழமொழிக்கான ஆங்கில விளக்கமும் தேவையே. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. பழமொழிகள் என்றும் நம் வாழ்க்கைக்கு தேவையான புது மொழிகள்தான்...

    ReplyDelete
  16. இதில் எதுவுமே நான் இதுவரை கேட்டதில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

    //காவக்காரன்... கோவக்காரன்... வேட்டைக்காரன்... எங்க வூட்டு மாப்பிள்ள ஒரு குடிகாரன்... //

    இதுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு?

    :D :D :D

    ReplyDelete
  17. இதுவரை கேட்டு அறியாத பழமொழிகளைக்
    கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  18. "முப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்லை. முப்பது வருஷம் தாழ்ந்தவனுமில்லை"

    உண்மை தான் சார் ! நல்ல பழமொழிகள் ! நன்றி !

    ReplyDelete
  19. நல்ல பணி
    பாராட்டுக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  20. நல்ல கலெக்ஷன்ஸ்... பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  21. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.