Tuesday, October 28, 2014

நீதியின் குரல்







ரெஹானா!
நீ போய் விட்டாய்
ஆனால் உன் கேள்விகள்
இந்த பிரபஞ்சத்தை இன்னும்
துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது

பணமும் செல்வாக்கும்
உன் உயிரை வேட்டையாடியிருக்கலாம்
ஆனால் உன் ஏக்கத்தை
உன் கண்ணீரை
அத்தனை எளிதில் மறந்துவிடாது சமூகம்

நீ மரித்துவிட்டாய் என
கயவர்கள் கருதினாலும்
நீ எங்கள் இதயங்களில்
உயிர்த்து விட்டாய்

இனி
பெண்களுக்கெதிராய்
அடக்குமுறை நடக்கும்
எத்தேசத்திலும்
உன் குரல்
நீதியின் குரலாய் ஒலிக்கும்
அதன் சத்தத்தில்
நீதியின் சூரியன்
தினந்தோறும் விடியும்.




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

No comments:

Post a Comment

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.