Sunday, November 9, 2014

சாதாரண கட்டிக்கும் கேன்சர் கட்டிக்கும் என்ன வித்தியாசம்?




நம் உடலில் தோன்றும் சாதாரண கட்டியையும், கேன்சர் கட்டியையும் எப்படி வேறுபடுத்தி கண்டறிவது? என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும்.

கட்டிகளைப் பற்றி நிறைய மூட நம்பிக்கைகள் நம்மிடையே உண்டு. சிலர் சொல்வார்கள் உள்ளங் கையிலோ அல்லது உள்ளங் காலிலோ வந்துவிட்டாலே அது புற்றுநோய்க் கட்டிதான் என்று அடித்துக் கூறி மற்றவர்களை பயமுறுத்துவார்கள். சிலர் சொல்வார்கள். கட்டியில் முடி முளைத்தால் அது கேன்சர் கட்டி என்பார்கள். வேறு சிலர் கட்டியில் உள்ள முடியைப் பிடுங்கி விட்டால் அது கேன்சர் கட்டி ஆகி விடும் என்பார்கள். ஆனால் இவை எல்லாமே வெறும் கட்டுக் கதைகள்தான். மருத்துவ ரீதியில் அவைகளெல்லாம் உண்மை இல்லை.

சாதாரண சிறு கட்டிகள் (Moles) அபூர்வமாக சில நேரம் கேன்சராக மாறும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதனை எளிதாக கண்டுபிடித்து விடலாம். தோற்றத்தை வைத்து தீர்மானித்து விடலாம். இந்த சிறு கட்டிகள் சில சமயம் நெவஸ் எனப்படும் செல்களின் கட்டுக்கடங்காத வளர்ச்சியினால் கேன்சராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அது ஆரம்ப நிலையில் Melanoma என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெலனோமா தான் முற்றி கேன்சராக உருமாறுகிறது. இதுவும் ஒரு வகை புற்றுநோய்க்கட்டிதான்.

ஆனால் பொதுவாக எந்த கட்டியாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் வளர்ந்துகொண்டே போனால் அது நிச்சயம் புற்றுநோய் கட்டியாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு ஒழுங்கான வடிவத்தில் வெகு நாட்களாக இருக்கும் சிறு கட்டி நிச்சயமாக கேன்சர் கட்டியாக இருக்க வாய்ப்பு இல்லை.



மேலே உள்ள படம் சாதாரண கட்டிக்கும் புற்று நோய் கட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக விளக்கும். அபரிமிதமான விரைவான ஒழுங்கற்ற வளர்ச்சியுடைய எந்த கட்டியும் கேன்சராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் நலமாகும்.

ஆகவே சிறு கட்டி வந்துவிட்டால் பயந்து செத்து விடாதீர்கள். நல்ல மருத்துவரிடம் சென்று காண்பித்து சிகிச்சை பெறுங்கள்.

வாழ்க நலமுடன்.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

5 comments:

  1. தேவையான அனைவரும் அறிய வேண்டிய பதிவு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவர் ஐயா! நலம்தானே ஐயா?!

      Delete
  2. அறிய தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.